ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக தெலுங்கு தேசம் அறிவித்திருப்பதற்கு, பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக கூறினார்.
தெலுங்கு தேசம் மீது நம்பிக்கை வைத்து தேசிய அளவில் பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகிய சில மணி நேரத்தில் பல்வேறு கட்சிகள் தெலுங்கு தேசத்தை தொடர்பு கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஆதரவு தெரிவித்தன.
மத்திய அரசுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது எந்த கட்சிக்கும் நம்பிக்கை கிடையாது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நாடகம் ஆடுவதை மற்ற கட்சிகளின் தலைவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
ஆந்திராவுக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று ஜனசேனா கட்சியின் தலைவர் நடிகர் பவன் கல்யாண் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பாமல் என்னை ஏன் விமர்சித்து வருகிறார் என்று தெரியவில்லை. இந்த பிரச்சினையை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆந்திராவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இந்த நாடே இப்போது தெலுங்கு தேசம் கட்சியையும், என்னையும் பார்த்துக் கொண்டு இருக்கிறது. 6 எம்.பி.க்கள் கொண்ட தெலுங்கு தேசம் குழுவினர் டெல்லியில் தங்கி இருந்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் பேசி நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…
சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…
சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…
சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…
சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…
சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…