படம் திரையிட்டு கேரளவுக்காக உண்டியல் வசூலித்த தயாரிப்பாளர்: அடேங்கப்பா என்ன ஒரு மனிதாபிமானம்…!!!

சமீபத்தில் வெளி வந்த காட்டு பய சார் இந்த காளி. இதில் ஜெயவந் என்பவர் தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஐரா நடித்தார், யுரேகா இயக்கி இருந்தார். இந்த படம் 25 நாட்களை கடந்து ஒரு சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் தயாரிப்பாளர் ஜெயவந், மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டரில் படத்தை இலவசமாக திரையிட்டார். இது குறித்து ஆட்டோவில் அந்த பகுதியில் பிரச்சாரம் செய்தார். படம் பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்தார்கள். தியேட்டரின் முன்னால் ஒரு உண்டியல் வைக்கப்பட்டது. படம் பார்க்க வரும் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவியை அந்த உண்டியலில் செலுத்தலாம் என்றும், அந்த தொகை கேரளா வெல்ல நிவாரணத்துக்கு அளிக்கப்படும் என்றும் அறிவித்தருந்தார். அதன்படி காட்சி முடிந்ததும் அந்த உண்டியல் பணம், உண்டியலுடன் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment