நமது இந்திய நாட்டின் குடியரசு தினம் வரலாறு…!!

இந்திய நாட்டு மக்கள் அனைவராலும் ஜனவரி 26ம் நாள் குடியரசு தினமாக கொண்டாடபடுகிறது. குடியரசு தினம் எதனால் கொண்டாடுகின்றோம் எவ்வாறு குடியரசு தினம் உருவானது என்பதை காண்போம்.
1947ம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 28ம் நாள் ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் நாள் அரசியமைப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் திறந்த அமர்வுகளில் சந்தித்து பல விவாதங்கள் நடைபெற்ற பின்பு  கடைசியாக சனவரி 24 ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இரண்டு கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.
அதன் பின்பு 2 நாட்கள் கழித்து இந்தியா சுதந்திரம் அடைவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான சனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.
அப்போது டெல்லியில் உள்ள இர்வின் மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற முதல் சிறப்பு விருந்தினர் இந்தோனேசியா தலைவர் சுகர்னோ ஆவார்.அப்போது டாக்டர்.ராஜேந்திர பிரசாத் இந்திய நாட்டின் முதல் குடியரசு தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment