இன்று கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், சீட் கிடைக்காத காங்கிரஸ், பாஜக பிரமுகர்களின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனைகளில் 23 கோடி ரூபாய் ரொக்கமும், ஏராளமான பரிசுப்பொருள்களும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
இதனிடையே, தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. பிரமுகர்களின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மாண்டியா, சிக்மகளூர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் பிரபலங்களின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தை சூறையாடினர்.
பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, குல்பர்கா மாவட்டத்தில் போராட்டம் வெடித்தது. நமோஷி என்பவரின் ஆதரவாளர்கள் சாலையில் திரண்டு, டயர்களை தீயிட்டு கொளுத்தி, பாஜக தலைமைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத பா.ஜ.க.பிரமுகர் ஷாஷி நமோஷி ((Shashil Namoshi)) குலுங்கி குலுங்கி அழுதார். செய்தியாளர் சந்திப்பில் பேச முனைந்த அவர், ஒரு கட்டத்தில் சோகம் தாளாமல் வாய்விட்டு அழுதார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள்…
Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான…
HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…