முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நெடுங்காலமாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்து மாநில ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளமை இந்திய அரசியல் களத்தில் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
நெடுங்காலமாக சிறைவாசம் அனுபவித்துவருகிற பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோமென தமிழக அரசு தரப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிருப்தி குரல்கள் வரிசையாக கிளம்ப துவங்கியுள்ளது.
கருணை அடிப்படையில் தேசத்தின் தலைமைப்பொறுப்பினை வகித்த ராஜீவை கொன்றவர்களை விடுவிப்பதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என அதிருப்தியை வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், புதுவை மாநில முதல்வருமான நாராயணசாமி.முன்னதாக, ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பது குறித்து முடிவெடுக்க இன்று தமிழக அமைச்சரவை கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…