தமிழகமே முதலிடம்..!! தமிழக அமைச்சர் பேட்டி.

இந்தியாவில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து 5–வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பெருமிதத்துடன் கூறினார்.
கோவில்பட்டி,
நேற்று தமிழக அமைசர் இல்லதிருமண விழாவுக்கு வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பத்திரிக்கையாளரிடம் கூறியது..
இந்தியாவில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து 5–வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது என்று கூறினார்.தொடர்ந்து அவர் கோரிய விவரம் வருமாறு …
இந்தியாவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதேபோன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையிலும் கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நமது நாட்டில் உள்ள தலைசிறந்த மாநிலங்களில் 2–வது இடத்தை தமிழகம் பெற்றுள்ளது. இங்கு பல கட்டமைப்புகளும் ஒருங்கே அமைய பெற்றுள்ளது.
தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதால், இங்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.  தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுவதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. சுற்றுலா தலங்களில் உள்ள நிறைகுறைகளை சுற்றுலா துறை அலுவலர்கள் களஆய்வு செய்து, அந்த தகவல்களை அரசுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை பராமரிக்கவும், சீரமைக்கவும் இந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவடையும். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை எந்த அளவு அதிகமாக உள்ளதோ, அந்த இடத்தில் சுற்றுலா துறை அலுவலர்களால் கள ஆய்வு செய்யப்படும். பின்னர் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான தங்கும் வசதி, கழிப்பிட வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுகின்றது.
குற்றாலத்தில் அருவிகளுக்கு செல்லும் வழியில் படிக்கட்டுகளை சீரமைப்பது, கைப்பிடி சுவர்கள் அமைப்பது, மின்விளக்குகள் அமைப்பது போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு சில குறைகள் இருந்தால், அவற்றை வருகிற நிதியாண்டில் சரி செய்வோம்.சுற்றுலா துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் நிறைவு அடைந்தவுடன், அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள்தான் அதனை பராமரிக்கும் முழு பொறுப்பை ஏற்கின்றனர். அதனால் சுற்றுலா தலங்களில் சுற்றுலா துறை கட்டணம் வசூலிக்கிறது, டெண்டர் விடுகிறது என்று கூறுவது தவறானது.
இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

DINASUVADU 

Dinasuvadu desk

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

2 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

3 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

10 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

15 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

15 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

15 hours ago