தனது கனவு படத்தை கதநாயங்களை வைத்து இயக்கும் மணிரத்னம்…பிரம்மாண்ட கூட்டணியோடு களமிரங்குகிறது…!!!

நடிகர் விஜய், விக்ரம், சிம்பு ஆகியோரை வைத்து பொன்னியின் செல்வன் கதையை படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image result for விஜய்

இயக்குநர் மணிரத்னம் என்றலே தனி ஸ்டைல் என்று படம் பார்க்க செல்பவர்கள் ஏராளாம் அப்படி அவர் இயக்கும் படம் என்றலே ஒரு தனி ரகம் தற்போது இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, நடிகர் சிம்பு, நடிகர் அரவிந்த் சாமி, நடிகர் அருண் விஜய் என திரை பட்டாளமே இணைந்து நடித்தனர். படம் சினிமா விமர்சகர்களிடையே நல்ல விமர்சனத்தையும்  வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பையும் பெற்றது. ரசிகர்கள் படத்தை சிறந்த மல்டி ஸ்டாரர் படம் என்று கொண்டாடினார்கள். இந்நிலையில் இயக்குநர் மணி ரத்னம் அடுத்ததாக தனது கனவு படமாக வைத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

Image result for விக்ரம்

இந்த கதையை முன்னரே நடிகர் விஜய் நடிகர்  மகேஷ்பாபு ஆகிய இருவரிடம் பொன்னியின் செல்வன் கதை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பட்டுள்ளதாகவும் ஆனால் படத்திற்குக்கான பட்ஜெட் எகிறியதால் அந்த முயற்சியை அப்போது மணிரத்னம் கைவிட்டதாக கூறப்படுகிறது.ஆனால் தற்போது இந்தப் படத்துக்காக நடிகர் விஜய்,நடிகர் விக்ரம்,நடிகர் சிம்பு ஆகியோரை இயக்குநர் மணி ரத்னம் அணுகியுள்ளார்.

Image result for சிம்பு

இது தொடர்பான வெளியான தகவல் படி நடிகர் விஜயை தன் அலுவலகத்துக்கு வரவழைத்து ஃபோட்டோ ஷூட் செய்யப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இது குறித்து மணிரத்னம் தெரிவிக்கையில் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.முன்று நட்சத்திரங்களின் காம்போ எப்படி இருக்கும் என்று ரசிகர்களிடையே ஆர்வம் எகிரியுள்ளது.

 

author avatar
kavitha

Leave a Comment