ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள், ஆதரவாளர்களுடன் உற்சாக கொண்டாட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.

தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் அச்சுறுத்தல் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், எப்போதும் இல்லாத வகையில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களது ஆதரவாளர்கள் மாலை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர். ஒன்றாக திரண்டுவரும் ஆதரவாளர்கள் தங்களது வெற்றி மகிழ்ச்சியை பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

DINASUVADU.COM

author avatar
Dinasuvadu desk

Leave a Comment