ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார்..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக வரும் நவம்பர் 18-ம் தேதி முதல் நவம்பர் 21-ம் தேதி வரை வியட்நாம் செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது  பல ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே கையெழுத்தாக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி வியட்நாம் சென்றார். அப்போது  இருநாடுகளுக்கிடையே 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. மேலும், இந்தியாவுடன் பாதுகாப்பு துறையில் ஒத்துழைத்து செயல்படுவதற்காக  வியட்நாம் நாட்டுக்கு ரூ.3,250 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment