ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பிரபலங்கள்….!!

தெலுங்கானா சட்டபேரவை தேர்தலில் திரைப்பிரபலங்கள் தங்களின் ஜனநாயக கடமையை வரிசையில் நின்று நிறைவேற்றி வருகின்றனர். ஐதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் வாக்குசாவடியில் நடிகர் நாகார்ஜுனா மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான அமலா ஆகியோர் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
இதேபோல் ஐதராபாத்தில் உள்ள 152வது வாக்குசாவடியில் நடிகர் அல்லு அர்ஜுனும் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
ஐதராபாத்தில் அபுல்ரெட்டி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தனது குடும்பத்தினருடன் வந்து வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment