சென்னை அணி தனது முதல் வெற்றியில் பட்டியலில் முதலிடம் பிடித்தது!

இந்தியாவில் ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டி ஆரம்பித்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 2 முறை உள்ளூர் மற்றும் வெளியூரில் மோத வேண்டும் இதில் முதல் நான்கு இடங்களை பெரும் அணி அடுத்த அரையிறுதிக்கு முன்னேறும். இதில் நேற்று இரவு சென்னை FC மற்றும் கவ்காத்தி அணிகளுக்கு சென்னை ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இந்த போட்டி இரு அணிகளுக்கும் இது 2-வது லீக் ஆட்டமாகும். சென்னை – கவுகாத்தி அணிகள் இதுவரை 6 முறை நேருக்கு நேர் சந்தித்து சென்னை அணி ஒரு முறையும், கவுகாத்தி அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில் 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

போட்டி தொடங்கிய 11-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணியின் ஹக்கு நெடியோடத் சென்னை அணிக்கு ஒரு கோல் அடித்து கொடுத்தார். அதன்பின் 24-வது நிமிடத்தில் சென்னை அணியின் ரபேல் அகஸ்டோ ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் சென்னை அணி 2-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் முதல் பாதிநேர ஆட்டத்தில் வேறு எந்த கோலும் அடிக்கப்படவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் சென்னையின் மொகமது ரபி ஒரு கோல் அடித்தார். கவுஹாத்தி அணியினர் இறுதிவரை எந்த கோலும் அடிக்கவேயில்லை. இதன்மூலம் சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.  ஆட்டநாயகனாக சென்னை அணியின் ரபேல் அகஸ்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment