இன்று பட்ட பகலில் திண்டுக்கல் நகர பகுதியில் துப்பரவு செய்யும் திண்டுக்கல் மாவட்டம் நெட்டுதெருவை சேர்ந்த பாலமுருகன்,சரவணன்,வீரா ஆகியோர் வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலிசார் சடலங்களை எடுத்து போக்குவரத்தை சீர் செய்தனர் . கொலையின் காரணம் என்ன என்றும் கொலை செய்தவர்கள் யார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.