சிவகாசியில் விஜயகாந்த் பேசிக்கொண்டிருந்த மேடையை நோக்கி கல்வீச்சு!

சிவகாசியில் தேமுதிக பொதுசெயலாளர்  விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தபோது மேடையின் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்கினர் .
பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும், பட்டாசு தொழிலில் உள்ள சிக்கல்களை போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் வளைவு முன்பு, தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென மேடையை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதனால் கட்சியினரிடையே திடீர் சலசலப்பு உண்டானது.
சிறுவர்கள் சிலர் விளையாட்டுத்தனமாக சிறிய அளவிலான கற்களை வீசி சென்றதாக தொண்டர்கள் கூறினர். இதை அடுத்து தொடர்ந்து பேசிய விஜயகாந்த், ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ……

Leave a Comment