சிறுமி பலாத்கார வழக்கில் ஆஜரான துணிச்சலான பெண் வழக்கறிஞர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவாக வாதாடுகிறார் பெண் வழக்கறிஞரான தீபிகா சிங் ரஜாவத்.

ஜம்முவில் 5 வயது மகளுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வழக்கில் தாம் ஆஜராவது தமது மகளுக்காகவும் சேர்த்துத்தான் என்றார். இவ்வழக்கில் இருந்து விலகி இருக்கும்படி தமக்கு மிரட்டல்கள் வருவதாக கூறிய தீபிகா சிங், மாநில வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தம்மை தகாத வார்த்தைகளால் திட்டியதாக மேலும் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment