குழந்தை ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து நண்பர்களுக்கு அனுப்பியவர் கைது!

தென்காசியில் குழந்தை ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனது நண்பர்களுக்கு அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் எனும் பகுதியில் காய்கறி சந்தையில் வேலை பார்த்து வரக்கூடியவர் தான் 37 வயதுடைய முருகேசன். இவர் தனது செல்போனில் ஆபாசமான குழந்தை புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து அதை தனது நண்பர்களுக்கு சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து தேசிய காணாமல் போன குழந்தைகள் மற்றும் பாலியல் சுரண்டல் உட்படுத்தப்படும் குழந்தைகள் கண்காணிப்பு … Read more

சாத்தான்குளம் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை – உடற்கூறு ஆய்வில் தகவல்

சாத்தான்குளத்தில் அருகே 8 வயது சிறுமி கொல்லப்பட்ட நிலையில் பாலியல் ரீதியில் சிறுமி துன்புறுத்தல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கல்வினை பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரின் மனைவி உச்சிமாகாளி. இவர்களுக்கு இசக்கிமுத்து என்ற மகனும், 8 வயதாகும் முத்தார் என்ற மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சேகர் மற்றும் அவரின் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்றார். நேற்று … Read more

ஆபாச படம் பார்த்தவர்களின் லிஸ்ட் ரெடி ! குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குனர் தகவல்

குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோ பார்ப்பதில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து இருந்தது.  சென்னையில் சிறார்களின் ஆபாச படம் பார்ப்பவர்களின் 74 பேர் கொண்ட பட்டியல் போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அண்மையில் ஒரு ஆய்வறிக்கை வெளியானது. அதிகமாக ஆபாச படம் பார்த்தவர்களில் இந்திய அளவில் தமிழ்நாடு சென்னை முதலிடம் பிடித்து இருந்தது. அதிலும், குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோ பார்ப்பவர்கள் அதிகம் என கூறப்பட்டது. இது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பாக … Read more

7 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமாருக்கு தர்ம அடி

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில்  கைதான சந்தோஷ் குமார் மீது பொதுமக்கள் சரமாரியாக  தாக்குதல்  நடத்தினார்கள்.  சதீஷ் என்பவர் கோவை மாவட்டம் பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூரை சேர்ந்தவர் ஆவார்.இவரது மனைவி பெயர் வனிதா.சதிஷ்-வனிதா தம்பதியினருக்கு  இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் திப்பனூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25 ஆம் தேதி  வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 7-வயது சிறுமியை காணவில்லை … Read more

சிறுமி பலாத்கார வழக்கில் ஆஜரான துணிச்சலான பெண் வழக்கறிஞர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவாக வாதாடுகிறார் பெண் வழக்கறிஞரான தீபிகா சிங் ரஜாவத். ஜம்முவில் 5 வயது மகளுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வழக்கில் தாம் ஆஜராவது தமது மகளுக்காகவும் சேர்த்துத்தான் என்றார். இவ்வழக்கில் இருந்து விலகி இருக்கும்படி தமக்கு மிரட்டல்கள் வருவதாக கூறிய தீபிகா சிங், மாநில வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தம்மை தகாத வார்த்தைகளால் திட்டியதாக மேலும் தெரிவித்தார்.