நடிகர் விஜய்-AR முருகதாஸ் கூட்டணியில் 3வது படமாக உருவாயிருக்கும் படம் சர்கார் இந்த படத்தில் நடிகை கீர்த்திசுரேஷ் நாயகியாக நடிக்க இசைபுயல் AR ரகுமான் இசை அமைக்க சன்பீக்சர்ஸ் தயாரிக்க என ஒரு பிரம்மாண்ட பட்டாளமே களமிரங்கிய இப்படத்தில் பாடல்கள் மற்றும் ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான படத்தின் டீசர் உலக சாதனை யூடுப்பையை கிரங்கடித்து 1 மில்லியன் லைக்குகளை பெற்று ஹாலிவூட் படத்தை மிஞ்சியது.இந்த நிலையில் படத்தை இயக்கிய இயக்குநர் AR முருகதாஸ் கதையை திருடிவிட்டார் என்று சினிமா வட்டாரங்களில் முனுமுனுப்பு ஏற்பட்டது.
இதற்கு இயக்குநர் பதில் அளித்துள்ளார்.படம் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. எப்போதும் 4 பேர் இது என்னுடைய கதை என்று தான் வந்து நிற்பார்கள்.அந்த வகையில் சர்கார் படம் இந்த தீபாவளிக்கு வர உள்ள நிலையில் வழக்கம் போல் இது என்னுடைய கதை என்று வருண் ராஜேந்திரன் என்று உதவி இயக்குனர் புகார் கொடுத்தார்.
இதற்கு இயக்குநர் முருகதாஸ் இது சிவாஜி சாருக்கு நடந்த விஷயம், அவர் ஒருமுறை வாக்களிக்க சென்ற போது வேறு ஒருவர் அவருடைய வாக்கை போட்டு சென்றுள்ளனர். அதை வைத்து தான் இந்த கதையை உருவாக்கினேன், இது முழுக்க முழுக்க என்னுடைய கதை என்று முருகதாஸ் கூறியுள்ளார்.இந்நிலையில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டிற்கு விடை கிடைத்துள்ளது.கத்தி,தூப்பாக்கி,ரமணா என்ற தரமான படங்களை கொடுத்தவர் AR முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU