"கயல்" பட புகழ் நடிகர் சந்திரன் மீது பண மோசடி வழக்கு பதிவு

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரன் மீது தயாரிப்பாளர் பிரபு என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மோசடி புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், கயல் சந்திரன் மற்றும் ரகுநந்தன் இருவரும் ‘நாங்கள் திட்டம்போட்டு திருடுற கூட்டம்’ படம் தயாரிக்கும் போது ரூ.5 கோடி வாங்கியதாக கூறியுள்ளார். படம் வெளியாகும் நேரத்தில் முக்கிய தயாரிப்பாளர் பட்டியலில் இருந்து அவர் பெயரை எடுத்துவிட்டதாகவும் இன்னும் அந்த பணத்தை கொடுக்கவில்லை என்றும் புகார் பதிவு செய்துள்ளார் . மேலும் அவர்,”கடந்த ஒரு வருடமாக நான் கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்கள். எனவே இது தொடர்பாக அவர்கள் இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்” என்று அவர் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment