கடத்தப்பட்ட 280 குழந்தைகள் மீட்பு…. ரயில்வே Child Help Line தகவல்…!!

கோவை ரயில் நிலையங்களில் கடத்தப்பட்ட குழந்தைகள் 280 பேரை மீட்டு பெற்றோர்களிடம்  ரயில்வே Child Help Line அமைப்பு தெரிவித்துள்ளது.

குழந்தைகள் தினவிழா மற்றும் ரயில்வே Child Help Line நண்பர்கள் வாரத்தையொட்டி,ரயிலில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து கொண்டு  கோவை முதல் ஈரோடு வரை ரயில் பயணமாக வந்த ரயில்வே Child Help Line அமைப்பினர் வழிநெடுகிலும் குழந்தைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டி, துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர்.

குழந்தை கடத்தல் சம்பவங்களை கண்டறிந்து குற்றங்களை தடுக்க ரயில் பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட ரயில்வே Child Help Line அமைப்பினர் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் கோவை ரயில் நிலையத்தில், கடத்தப்பட்ட 280 குழந்தைகள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நல வாரியம் மூலமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினர்.

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment