கலப்பு திருமணம் செய்து கொண்டவருக்கு ஓசூர் அருகே 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அபராதம் செலுத்தாததால் வீட்டுக்கு முள்வேலி அமைத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்றரை ஆண்டுக்கு முன் ஜோகிர்பாளையத்தை சேர்ந்த சந்துரு அதே கிராமத்தை சேர்ந்த வேறு சாதியைச் சேர்ந்த தேவயானி என்பவரைக் காதலித்து மணம் முடித்துக் கொண்டு கோவையில் வசித்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு சந்துரு தனது குடும்பத்துடன் ஜோகிர்பாளையத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது,உள்ளூர் பஞ்சாயத்தார் கலப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, சந்துரு குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாயும், தேவயானி குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்துள்ளனர்.
சந்துருவின் வீட்டுக்கு பூட்டு போட்ட பஞ்சாயத்தார், வீட்டை சுற்றி முள்வேலியையும் அபராதத் தொகை முழுவதையும் குறித்த காலத்தில் செலுத்தாததால் அமைத்து அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஜோகிர்பாளையம் சென்ற சூளகிரி போலீசார், முள்வேலியை அகற்றினர். கட்டப்பஞ்சாயத்து செய்த ராகவன், சின்னராஜ், கோவிந்தன், செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…