எந்த உடையிலும் நடிக்க தயார் என பிரபல நடிகை அறிவிப்பால் சர்ச்சை ..!

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘புருஸ்லி’ படத்தில் நடித்த கிரித்தி கர்பன்டாவுக்கு மாறி மாறி வேடங்கள் அமைவதால் எதற்கும் தயார் என கூறியிருக்கிறார். தமிழில் ஒரு படத்தோடு மூட்டைக்கட்டிக்கொண்டு சென்றவர் தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

பட வாய்ப்புகள் பற்றி கிரித்தி கூறும்போது, ’சில படங்களில் தாவணி அணிந்தும், வேறு சில படங்களில் சேலை அணிந்தும் நடுத்தர குடும்ப கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு ஏற்ப என்னை தயார்படுத்திக் கொண்டு அந்த வேடங்களில் ஒன்றிவிடுகிறேன். அதேசமயம் மாடர்ன் உடையும் எனக்கு மிகப் பொருத்தமாக அமையும்.

அதுபோன்ற கதாபாத்திரங்களையும் நடிக்க மறுப்பதில்லை’ என்றார். சில தினங்களுக்கு முன் கிரித்தி தனது புதியதோற்றம் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார். இலைமறை காயாக மேல்கோட்டு அணிந்தும், பேகிஸ் பாணியில் கருப்பு பேண்ட் அணிந்தும் காட்சி தந்தவர், இதுஎப்படி இருக்கு என ரசிகர்களை கிக்கான கேள்வி கேட்டு கிரங்கடித்திருக்கிறார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment