எட்டாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று முடிந்தது. நேற்றய ஆட்டத்தில் இறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிபோட்டியில் ஏழுமுறை சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்ற தமிழகத்தை சேர்ந்த சரத் கமலும், மற்றொரு வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான ஆண்டனி அமல்ராஜை எதிர்கொண்டார்.
இதில் ஆண்டனி அமல்ராஜை வீழ்த்தி எட்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். இதன்மூலம் முன்னாள் டேபிள் டென்னிஸ் சாம்பியன் கமலேஷ் மேத்தாவின் சாதனையை சரத் கமல் சமன் செய்துள்ளார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் சவுமியஜித் கோஷ்- ஜுபின் குமார் ஆகியோரும், பெண்கள் இரட்டையர் பிரிவில் மவுசுமி பால்- ரித்விகா சின்ஹா ஆகியோரும் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.
மேலும் செய்திகளை படிக்க தினசுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment