உளவு பார்க்கப்பட்ட பிரியங்கா காந்தியின் வாட்ஸ் ஆப் தகவல்கள் -காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

பிரியங்கா காந்தியின் வாட்ஸ் -ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.கடந்த நாட்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் சர்ச்சை ஒன்றில் சிக்கியது.அதாவது இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வாட்ஸ் அப் செயல்பாட்டை இஸ்ரேலில் உள்ள தனியார் நிறுவனம் ஓன்று உளவு பார்த்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில்  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மற்றவர்களை போல பிரியங்காவின் செல்போனும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.இதற்கான குறுந்தகவலும் வாட்ஸ் ஆப் நிறுவனம் அனுப்பியிருக்கிறது என்று தெரிவித்தார்.