இளம்பெண் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட BJP எம்எல்ஏ மகன் மறுநாளே விடுவிப்பு..!!

கோவாவில் சொகுசு கார் மோதி இளம்பெண் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ மகன் மறுநாளே விடுவிக்கப்பட்டார்.
கோவாவில் ஆளும் பாஜக எம்எல்ஏவான கிளென்டிக்ளோவின் 27 வயது மகன் கெய்ல் கிளென் சவுசா, திங்களன்று பிஎம்டபிள்யு காரை ஓட்டிச் சென்ற போது சாலையை கடக்க முயன்ற இரு இளம்பெண்கள் மீது மோதினார். சகோதரிகளான அவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தை அடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் கார் மீது கல் வீசி தாக்கி சேதப்படுத்தியதுடன், காரையும் எரிக்க முயன்றனர். இது தொடர்பாக 7 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ மகன் மறுநாளே விடுவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment