இலங்கையின் கொடுமை: "8 மீனவர்கள் ,ரூ 60,00,000 அபராதம்"குடும்பத்தினர் கண்ணீர்..!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 தூத்துக்குடி மீனவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை மற்றும் தலா 60 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக, 8 மீனவர்களை கைது செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 மீனவர்களுக்கும் இதுவரை 5 முறை காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், கல்பிட்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, 8 தூத்துக்குடி மீனவர்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை மற்றும் தலா 60 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து, 8 மீனவர்களும் மீண்டும் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் குடும்பத்தினர், அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
DINASUVADU 

Dinasuvadu desk

Recent Posts

எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை… கோவாக்சின் நிறுவனம் விளக்கம்.!

Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…

20 mins ago

ஒரே நாளில் ரூ.800 சரிவு.. சவரனுக்கு ரூ.53,000 க்கும் கீழ் சென்ற தங்கம் விலை.!

Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…

35 mins ago

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…

42 mins ago

நாளை மறுநாள் வளைகாப்பு.. ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பரிதாப மரணம்.!

Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற…

48 mins ago

ஒரே மைதானத்தில் இந்திய அணியின் போட்டிகள் ? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போடும் புதிய திட்டம் !!

Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…

1 hour ago

கோலிவுட் இஸ் பேக்! அரண்மனை 4 படத்துக்கு குவியும் மிரட்டல் விமர்சனங்கள்!

Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…

1 hour ago