ஆடைகளை களைந்து ஆட்டம்…4 திருநங்கைகள் கைது…!!

டெல்லியில் உள்ள பாலத்தில் ஆடைகளை களைந்து  நடனம் ஆடிய 4 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
சிக்னேச்சர் என்ற புதிய பாலம் டெல்லியில் கட்டப்பட்டு இருந்தது. இந்த பாலத்தில் பொதுமக்களில் சிலர் ஆபத்து நிறைந்த வகையில் செல்பி எடுத்து வந்தனர்.இவர்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
இந்த நிலையில்,சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியானது.அந்த வீடியோ-வில்  4 திருநங்கைகள் அந்த பாலத்தில் தங்களது ஆடைகளை களைந்து பொதுமக்கள் முன்பு  நடனம் ஆடியுள்ளனர்.இது சமூக வலைதளத்தில் வைரலாகியது.
வீடியோ காட்சிகள் அடிப்படையில் போலீசார்  4  திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.தற்போது அந்த பாலத்தில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment