BREAKING NEWS: தூத்துக்குடி ,விருதுநகர் மாவட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை…!!

தொடர் மழை காரணமாக விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (16.11.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் கரையை கடந்த நிலையில் அதிதீவிர புயலாக பலத்த சூறைக்காற்றுடன் வீசி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.இந்நிலையில் மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் புயல் கடுமையாக வீசி வருவதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில் புயல் காரணமாக தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மக்களை பாதுகாக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.அதன்படி தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment