அஞ்சலி செலுத்தினார் மு.க அழகிரி..!கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி..!விளக்கம்..!!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி அவருடைய மகன் துரை தயாநிதி,மகள் உள்ளிட்டோறும் அஞ்சலி செலுத்தினார்.இன்று காலை துவங்கிய அமைதி பேரணியில் மு.க அழகிரி தலைமையில் நடைபெற்றது.

மேலும்முக.அழகிரி என்னிடம் தான் திமுக தொண்டர்கள் உள்ளனர், என் கவலை எல்லாம் கட்சியை பற்றியதுதான் என்று முக.ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்.அது மட்டும் இல்லாமல் இன்று (செப்டம்பர் 5ம் தேதி) நடக்க உள்ள, பேரணி நடத்துவதில் நம்முடைய பலத்தை கட்ட வேண்டும் தெரிவித்த மு.க அழகிரி அதனை போலவே பேரணியை கருணாநிதி நிணைவிடம் வரை நடத்தி முடித்துள்ளார்.

மேலும் பேரணி குறித்து பேசிய அவர் பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி நடைபெற்றது என்றும்அமைதி பேரணியின் பங்கேற்ற கருணாநிதியின் உண்மையான தொண்டர்களுக்கு நன்றி ஆதரவு அளித்த பத்திரிக்கைகளுக்கும்,பேரணிக்கு அனுமதி அளித்த காவல்துறைக்கும் நன்றி என தெரிவித்தார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment