விமானத்தில் வலியால் துடித்த பெண்..! கழிவறைக்கு சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி ..!

  • நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது  பெண் பயணி காலில் ஏதோ கடித்ததால் வலியால் துடித்தார்.
  • கழிவறைக்கு சென்று பார்த்த போது தனது உடையில் இருந்து தேள் வந்தது.

யுனைடெட் விமானத்தில் கடந்த சனிக்கிழமை காலை சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து அட்லாண்டிக் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில்100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் சேர்த்தனர்.நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது பயணம் செய்த பயணிகளில் ஒரு பெண் பயணியின் காலில் ஏதோ கடிப்பது போன்று உணர்ந்தார்.

திடீரெனஅப்பெண் வலியால் துடித்துள்ளார். உடனே அப்பெண் கழிவறைக்கு சென்று பார்த்த போது தனது உடையில் இருந்து தேள் ஒன்று  வெளியே வந்துது.பின்னர் அந்த தேளை பணிப் பெண்கள் பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து யுனைடெட் விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில் , சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து அட்லாண்டா இது பயணம் செய்தவர்களில் ஒருவரை தேள் கடித்ததாக எங்களுக்கு தகவல் வந்தது.

ஆனால் விமான குழுவினர் உடனடியாக முதலுதவி கொடுத்தனர். பின்னர் அட்லாண்டாவில் விமானம்  தரை இறங்கியதும். தேள் கடித்த பெண்ணை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அப்பெண் நலமாக உள்ளார் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

author avatar
murugan