லண்டன் நீதிமன்றம், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீதான கைது வாரண்ட் தற்போதும் உயிர்ப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் ரகசியங்களையும், ஊழல்களையும் வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அடைக்கலம் புகுந்துள்ளார்.
அவருக்கு அண்மையில் ஈகுவடார் அரசு குடியுரிமை வழங்கிய நிலையில், லண்டனில் உள்ள வழக்கில், ஜாமீன் பெற்று, தப்பியது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அசாஞ்சே தரப்பு வழக்கறிஞர், கைது வாரண்டை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற விதிகளின்படி, அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காதவரை, ஜூலியன் அசாஞ்சே மீதான கைது வாரண்டு அப்படியே தான் இருக்கும் என உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.