சச்சினுடன் ஒப்பிடுகையில் கோலி வேறுமாதிரியானவர்.! முன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டன் கணிப்பு.!

சச்சினுடன் ஒப்பிடுகையில் கோலி சற்று வித்தியாசமானவர். சச்சின் அமைதியானவர். கோலி ஆக்ரோசமானவர். – வாசிம் அக்ரம். 

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின். அவரது ரசிகர்களுக்கு சச்சின் தான் கிரிக்கெட் உலகின் கடவுள். அவரை பின்பற்றியே சர்வதேச கிரிக்கெட் உலகில் பல வீரர்கள் உருவாக்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் சச்சினின் சாதனையை முறியடிக்க இவரால் முடியும் என நம்பிக்கை அளித்து வரும் வீரர் என்றால் அது விராட் கோலி தான்.

இருவரையும் ஒப்பிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கருத்து கூறியுள்ளார். வாசிம் அக்ரம் தனது யு-டியூப் பக்கத்தில் கருத்து கூறுகையில், ‘ பேட்டிங் திறனில் சச்சினும் கோலியும் வேறுவிதமான வீரர்கள். சச்சினுடன் ஒப்பிடுகையில் கோலி சற்று வித்தியாசமானவர். சச்சின் அமைதியானவர். கோலி ஆக்ரோசமானவர். 

சச்சினை அவுட் செய்ய முயற்சி செய்து. அதில் அவர் அவுட் ஆகாமல் இருந்துவிட்டால், சச்சின் இன்னும் உறுதியுடன் களத்தில் நிற்பார். ஆனால், கோலியை அவுட் செய்ய முயற்சி செய்து அவர் அவுட் ஆகாமல் இருந்தால் அவர் கோபப்படுவார். தன்னிலையை சற்று இழப்பார். ஒரு பேட்ஸ்மேன் கோபப்படும்போது பந்தை விளாசுவார். அந்த சமயம் தான் அவரை அவுட் ஆக்க அதிக வாய்ப்புகள் பந்துவீச்சாளருக்கு கிடைக்கும்.’ என தனது கருத்துக்களை வாசிம் அக்ரம் கூறியுள்ளார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.