டெல்லியில் வன்முறை : 18 சிறப்பு குழுக்களை அமைத்த அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 18 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது.

இந்நிலையில் இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 18 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு குழுக்கள் மூலம் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.