வடசென்னை இரண்டாம் பாகம் கைவிடப்படுகிறதா?! தனுஷ் கொடுத்த விளக்கம்!

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் வடசென்னை. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்களிடம், பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் குறைவின்றி அருமையாக நடித்து இருந்தனர்.

இந்த படத்தின் கதை முதல் பாதி மட்டுமே முடிந்தவாறு இருக்கும். மீதி கதை அடுத்த பாகத்தில் வரும் என வடசென்னை முதல் பாகத்தின் முடிவில் காட்டப்பட்டிருக்கும்.

ஆனால் அதற்குள் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி அசுரன் படத்தில் பிசியாக எடுத்து வருகின்றனர். இந்த படத்தை முடித்து வடசென்னை இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வாச்சென்னை இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாகவும், அங்குள்ள மக்களை தவறாக சித்தரித்துவிட்டார்கள், படத்தில் நடித்த நடிகர்களை மீண்டும் ஒருங்கிணைப்பது கஷ்டம் என பல காரணங்கள் உலாவின.

இதற்க்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ வடசென்னை இரண்டாம் பாகம் பற்றிய வதந்திகள் எப்படி பரவியது என தெரியவில்லை. வடசென்னை இரண்டாம் பாகம் எடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. படம் பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள். முறையான அறிவிப்புகளை நானே எனது டிவிட்டர் பக்கம் மூலம் வெளியுறேன் என தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.