இன்றைய (30.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று தன்னிச்சையாகவும், துணிச்சலுடனும் செயல்படுவீர்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் மகிழ்ச்சியை அளிக்கும்.

ரிஷபம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமை கடைபிடிக்க வேண்டும். வீண் வாக்குவாதம் நேரிடும். அதனால் கவனமுடன் பேச வேண்டும்.

மிதுனம் : இன்று மந்தமான நாளாக இருக்கும். சில கடுமையான சூழல்கள் உண்டாகும். அதை சமாளித்து அடுத்த கட்டத்திற்கு நடந்து செல்லுங்கள்.

கடகம் : இன்று உங்களுக்கு வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் பணிகளை எளிதாக செய்ய முடியும். உறுதியுடன் செயல்பட்டால் வளர்ச்சி நிச்சயம்.

சிம்மம் : இன்று உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணிகள் எளிதாக முடியும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

கன்னி : இன்று செய்யும் செயல்களில் எதார்த்தம் தேவை. உங்கள் இலக்குகளை அடைவதற்கு கடினமான பாதைகள்தான் இருக்கும். மனதை அமைதியாக வைத்து கவனமுடன் செயல்பட வேண்டும்.

துலாம் : இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்கும் நாள் அல்ல. இருந்தாலும் அதன் மூலம் நீங்கள் திறமையான வளர்த்து கொள்ளலாம். உங்கள் நண்பர்கள் உங்கள் நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் வாய்ப்பு இருக்கும்.

விருச்சிகம் : இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எண்ணங்களும் அதுபோல் இருக்கும். தியானம் மேற்கொள்வது மூலம் அமைதியை பெறலாம்.

தனுசு : இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்காது. உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் போராட வேண்டும். எதனையும் அதிகமாக எதிர்பார்க்க கூடாது.

மகரம் : உங்களுக்கு கவலை அளிக்கும் விதமாக சில சூழ்நிலைகள் ஏற்படும். உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதை சமநிலையில் வைத்திருக்க வேண்டும். இன்றைய நாள் நல்ல பலனளிக்கும். குடும்பத்துடன் வெளியே செல்ல ஏதுவான நாள்.

கும்பம் : இன்று சற்று மந்தமான நாள். உங்கள் செயல்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

மீனம் : தன்னம்பிக்கை உள்ள நாள். உங்கள் இலக்குகளை அடைவதற்கு தேவையான முயற்சியும் கான மன உறுதியும் உங்களிடம் இருக்கும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.