மூன்றாவது டெஸ்ட் போட்டி: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி  215 ரன்கள்…!

இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  215 ரன்கள் அடித்துள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று துவங்கியது.

இதன் பின் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  89 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் விராட் 47*, புஜாரா 68* ரன்களுடன் உள்ளனர். மேலும் அறிமுக வீரர் அகர்வால் 76 ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார்.

Leave a Comment