தமிழகத்தில் அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்…! மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள சிறிய, பெரிய அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

கஜா புயல் காரணமாக தமிழக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.அதில் கஜா புயலால் தமிழகத்தில் உள்ள சிறிய, பெரிய அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.அணைகளின் நீர்வரத்து மற்றும் வெளியேற்றத்தை அவ்வப்போது கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

 

Leave a Comment