பிள்ளைகளின் கண் முன்னே தந்தைக்கு நடந்த கொடூரம்!காவல்துறையினரின் வெறிச்செயல்!

  • பிள்ளைகளின் கண் முன்னே தந்தைக்கு நடந்த கொடுமை.கண்ணீர் மல்க பேட்டியளித்த பிள்ளைகள்.
  • காவல்துறையினரின் வெறிச்செல்லுக்கு அளவே இல்லையா என கொந்தளிப்பு பேட்டி.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்த வண்ணம் உள்ளது.இதில் பல இடங்களில் காவல்துறையினரை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.அதில் சுமார் 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதில் மங்களூரை சேர்ந்த ஜலீல் என்பவரும் ஒருவர் ஆவார்.தினக்கூலியாக வேலைபார்த்துவரும் இவருக்கு 14 வயதுடைய ஷிபானி என்ற மகளும் சபீல் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் சம்வத்தினத்தன்று மங்களூரில் பல இடங்களில் போராட்டம் நடந்துள்ளது.இதனால் பள்ளி வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் பிள்ளைகளை அழைத்து கொண்டு ஜமீல் வீடு திரும்பியுள்ளார்.அப்போது வீட்டுக்கு உள்ளே நுழையும் நேரத்தில் துப்பாக்கி குண்டு ஜெமீலின் கண்களை துளைத்துள்ளது.இதை பார்த்து அங்கிருந்த ஜெமீலின் குழந்தைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் வழியால் துடித்த ஜெமீலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.இது குறித்து ஜமீலின் குழந்தைகள் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளனர். பின்னர் அவரின் உறவினர்கள் ஆயிரம் பேர் போராட்டம் நடத்தினர் என்று காவல்துறையினர் பொய் சொல்கிறார்கள் என்றும் கூறியுள்ளனர்

மேலும் போராட்டத்திற்கு செல்லாத ஜெமீலுக்கு நடத்த கொடுமை என்ன சொல்வது என்று கொந்தளிப்புடன் பேட்டியளித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.