நிதி நிலைமை ஐ.சி.யூ.விற்கு எடுத்துப்போகும் அளவுக்கு மோசமாகிவிட்டது – மு.க ஸ்டாலின்

தமிழகத்தின் நிதி நிலைமை ஐ.சி.யூ.விற்கு எடுத்துப்போகும் அளவுக்கு மோசமாகிவிட்டது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றசாட்டியுள்ளார்.

முதல்வரின் தவறான நிதி மேலாண்மையால் ரூ.4.56 லட்சம் கோடி கடன், ரூ.25,000 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் கடன் சுமையை ஏற்றி வைத்து வேடிக்கை காட்டுகிறது அரசு. கொரோனா காலத்தில் போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வரை முதலீடுகள் வரவில்லை. நிதி நிலையை மறுவரையரை செய்ய ஆக்கப்பூர்வ ஆலோசனை வழங்கியும் அரசு சிந்தித்து பார்க்கவில்லை.

ஆர்.பி.ஐ முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் குழு அமைத்து இதுவரை அரசு அறிக்கை பெறவில்லை. வருவாய், நிதி பற்றாக்குறை இரண்டும் அதிமுக ஆட்சியின் இணை பிரியாத கை குழந்தைகளாக பயணிக்கிறது. எஞ்சியுள்ள 6 மாதங்களில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியுமா என முதல்வர் ஆராய வேண்டும். மேலும், கொரோனா சூழலில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மீளாத்துயரில் மூழ்கியுள்ள மக்களின் வாழ்வில் குறைந்தபட்ச ஒளியையாவது ஏற்றிட அரசு முன் வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்