விமான என்ஜினில் நாணயத்தை வீசிய பயணி பின்னர் நடந்த கொடுமை.!

  • முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருந்ததால் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என கடவுளை வேண்டி நாணயங்களை என்ஜினில் வீசியதாக கூறினார்.
  • இதனால் அந்த பயணிக்கு இந்திய மதிப்பில் ரூ.12 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் சார்ந்தவர்  லூ சாவோ(28). இவர் விமானத்தில் பயணம் செய்ய அங்கு உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று உள்ளார். அப்போது விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்த போது  லூ சாவோ திடீரென  ஒரு நாணயங்களை எடுத்து விமானத்தின் என்ஜினுக்குள் தூக்கி எறிந்தார்.

இதனால்  விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கினர்.இதையடுத்து விமானத்தை பரிசோதனை  செய்ததில்  என்ஜின் சேதம் அடைந்ததால்  பயணிகள் அனைவரும் வேறுஒரு  விமானத்தின் மூலம்  அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் லூ சாவோ போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்  முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருந்ததால் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என கடவுளை வேண்டி நாணயங்களை என்ஜினில் வீசியதாக கூறினார்.

இதனால் அவருக்கு  இந்திய மதிப்பில் ரூ.12 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த அபராத தொகையை சேதம் அடைந்த “லக்கி ஏர்” விமான நிறுவனத்திற்கு கொடுக்கவேண்டும் என நீதிபதி கூறினார்.

author avatar
murugan