பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் மதவாத ஆதிக்கத்தை கையாளுகிறது : ஜிக்னேஷ் மேவானி….!!

பிரதமர் மோடி பதவி ஏற்ற பின் நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறை தாக்குதல்களும், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளும் அதிகரித்து விட்டதாக, குஜராத் மாநில வட்காம் தொகுதி எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி குற்றம் சாட்டியுள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் முன்னெடுப்பில், சென்னையில் மூன்று நாட்கள் நடைபெறும் வானம் என்ற நிகழ்ச்சியை ஜிக்னேஷ் மேவானி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் மதவாத ஆதிக்கத்தை கையாளுவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கூறிய மேவானி, தாழ்த்தப்பட்ட மக்கள் இழிவாக நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். மக்களுக்கு எதிரான பாஜக ஆட்சி, வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் முடிவடையும் எனவும் கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment