இரட்டை தலைமை காரணமாகவே அதிமுகவில் இணையவில்லை..!திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன்

இரட்டை தலைமை காரணமாகவே அதிமுகவில் இணையவில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியின்  தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.இது தொடர்பாக போடியில் பேட்டியளித்த தங்க தமிழ்செல்வன்  இரட்டை தலைமை காரணமாகவே அதிமுகவில் இணையவில்லை மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக அமமுகவில் இருந்து விலகி திமுகவிற்கு வந்துள்ளேன் திமுகவிற்கு சாதாரண தொண்டனாக வந்துள்ளேன். பதவியை எதிர்பார்த்து வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

author avatar
kavitha