தன்னிலை உணராது தடித்த வார்த்தைகளைக் கூறலாமா?கிரண்பேடிக்கு அதிமுக கண்டனம்.!

தன்னிலை உணராமல் தடித்த வார்த்தைகளைக் கூறலாமா? புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி என்று அவருக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து சர்ச்சை கருத்துக்கூறிய வகையில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிமுக கண்டனம் தெரிவிப்பதாக அக்கட்சி தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் பதவிக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து பதிவு செய்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது என்று அதில் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழக மக்களை விமர்சித்த புதுவை துணைநிலை ஆளுநர்க்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Image

Image

author avatar
kavitha