தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 2 ஆம் தேதி கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 2 ஆம் தேதி கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 2ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தனது அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்தி வைக்கப்படும். இந்த கூட்டத்தொடரில், மேகேதாட்டு விவகாரங்கள், ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment