கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்கிறது! குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு!

தமிழக அரசு, கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்வதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு.

தமிழகத்தில் கொரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்துவதாற்காக தமிழக அரசு பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, தமிழாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய  அவர், தமிழகத்தில் எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

மேலும், தமிழக அரசு, கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்வதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.