தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு மார்ச் மாதம் முழுவதும் விடுமுறை ! தேர்வுகளும் ஒத்திவைப்பு

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு  மத்திய பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 31-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும்  வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு  மத்திய பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 31-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக  துணைவேந்தர் தாஸ் தெரிவித்துள்ளார்.மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை என்றும் தெரிவித்துள்ளார்.