14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாம்பியன் ஆனார் விஸ்வநாதன் ஆனந்த்

உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் சௌதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் முன்னனி செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வென்றுள்ளார். இந்த சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டியில் விஸ்வநாதன் ஆனந்தும், பெட்டோசோவும் மோதினர். இதில் 2-1 என்கிற கணக்கில் விஸ்வநாதன் ஆனந்த் வென்றுள்ளார். இந்த வெற்றி பற்றி கூறும்போது, ஆனந்த், ‘இது ஒரு அற்புதமான ஆச்சர்யம்’ என தெரிவித்துள்ளார். source : dinasuvadu.com