சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர்   இயக்கத்தில், காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் செப்.20-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஜான் சார்லஸ் என்பவர் காப்பான் படத்தின் கதை தன்னுடையது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, இந்த உததரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், நீதிபதி மணிகுமார் அமர்வில் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், காப்பான் படத்துக்கு எதிராக ஜான் சார்லஸ் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, காப்பான் திரைப்படம் எந்த தடடையும் இன்றி செப்-20ல் வெளியாகவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.