ஜி.வி இசையில் ராப் பாடகராக களமிறங்க உள்ளாரா சூர்யா?!

நடிகர் சூர்யா தற்போது இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படம் ஜனவரியில் ரிலீசாகும் என கூறப்பட்ட நிலையில் இப்பட வேலைகள் மீதம் இருப்பதால், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தான் தள்ளி போய் உள்ளதாம்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  இது ஜி.வி.பிரகாஷுக்கு 70வது திரைப்படமாகும். இதுபற்றி ட்விட்டரில் அவர் தெரிவிக்கும் போது, இதுவரை ராப் பாடாத ஒரு நபர் இப்படத்தில் ராப் பாடல் ஒன்றை பாட உள்ளார். என குறிப்பிட்டுள்ளார். ராப் பாடாத அந்த  பிரபல நடிகர் சூர்யா தான் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதற்கு முன்னர்ஸ் சூர்யா அஞ்சான் படத்தில் ஏக் தோ தீன் எனும் பாடலை பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல சூரரைப்போற்று திரைப்படத்தில்  ஜி.வி இசையில் ராப் பாடலை பாடுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.