பட்ஜெட் அதிகமானதால் சிவகார்த்திகேயன் பட தயாரிப்பில் இருந்து விலகியதா லைகா நிறுவனம்?!

நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர்  ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். மேற்கண்ட இரண்டு படங்களையும் K.J.R நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த படங்களை அடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில்  விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது லைகா நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. அந்நிறுவனத்தின் உள் பிரச்சினையாலும், இப்படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பதாலும் இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
அதனால் இப்படத்தை தற்போது இப்படத்தையும் K.J.R நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.