முடி உதிர்வது நிற்க வேண்டுமா? செம்பருத்தி பூ இருந்தால் போதும்!

பெண்களுக்கு முடி என்றாலே அழகுதான். ஆனால் என்ன அந்த முடி நிலைப்பது தான் இல்லை. காரணம் சரியான பராமரிப்பு இல்லாதது மற்றொன்று சத்துக்குறைவு, இதைப் போக்குவதற்கு இயற்கையான பல வழிமுறைகள் உள்ளது. வாருங்கள் பாப்போம். 

தேவையான பொருட்கள்

  • காயவைத்த செம்பருத்தி
  • பொடியாக்கிய வெந்தயம்
  • நீர்

செய்முறை

முதலில் காயவைத்த செம்பருத்தி பூவை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். பின்பு செம்பருத்தி பூ 2 ஸ்பூன் வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரண்டையும் கலந்து தேவையான அளவு நீர் ஊற்றி குழப்பி வைத்துக் கொள்ளவும். இரண்டு நிமிடத்தின் பின்பு அதை தலையில் பூசிக் கொள்ளவும். அதன் பின் அரைமணி நேரமோ அல்லது ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் முடி உதிர்தல் நீங்கி அழகான பளபளப்பான கூந்தல் விரைவில் கிடைக்கும்.

author avatar
Rebekal