துப்பாக்கி சுடுதல் போட்டி:இரட்டை  தங்கப்பதக்கங்களை வென்ற மனு பாக்கர்

  • போபாலில் நேற்று நடந்த 63 வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
  • காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான மனு பாக்கர் இரட்டை  தங்கப் பதக்கங்களை வென்றார்.

போபாலில் நேற்று நடந்த 63 வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான மனு பாக்கர் தங்கப்பதக்கங்களை பெற்றார்.

இதில் ஹரியானாவைப் சார்ந்த 17 வயதான பாக்கர்  நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் இரட்டை  தங்கப் பதக்கங்களை வென்றார்.தனிநபர் மட்டுமின்றி அணிகள் பிரிவிலும் மானு பாகெருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

மனு பாக்கர் சீனியர் பிரிவில் 243 புள்ளிகளும், ஜூனியர் பிரிவில் 241 புள்ளிகளும் எடுத்து முதலிடத்தை பிடித்தார். சீனியர் பிரிவில் யஷாஸ்வினி சிங் தேஷ்வால் 217.7 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் ,  தேவன்ஷி தமா 237.8 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.

author avatar
murugan